தமிழ்நாடு

தாயை பிரிந்து கிராமத்திற்குள் நுழைந்த குட்டியானை : வனப்பகுதிக்குள் விரட்டிய இளைஞர்கள்

ஒசூர் அருகே காட்டுயானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டியானை ஒன்று, கிராமத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

ஒசூர் அருகே காட்டுயானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டியானை ஒன்று, கிராமத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அகரம் கிராமத்திற்குள் சுற்றித்திரிந்த அந்த குட்டியானையை, இளைஞர்கள் துரத்திச் சென்று அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். தாயிடம் இருந்து பிரிந்து வந்த அந்த குட்டியானை, ஜல்லிக்கட்டு காளை போல, துள்ளிக்குதித்து ஓடியது. இந்நிலையில், அந்த குட்டியானை தாயிடம் சேர்ந்ததா? என வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"