புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னை கிண்டியில் மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலியாகவும் மருத்துவ பணியாளர்களை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் மெட்டல் டிடெக்டர் சோதனை நடைபெறுவதாக மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.