தமிழ்நாடு

ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்.. விசாரணையில் பகீர் பின்னணி

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே ஜோதிடம் பலிக்காததால், முகநூல் நண்பருடன் சேர்ந்து ஜோதிடரை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் அருகே, ஜான் ஸ்டீபன் என்கிற ஜோதிடர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நம்பி ராஜன் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலையரசி என்கிற பெண், பிரிந்துபோன தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக, ஜோதிடர் ஜான் ஸ்டீபனை அணுகியுள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்தும் கணவருடன் சேர்ந்து வாழ முடியாததால், தான் கட்டணமாக கொடுத்த 9 லட்சம் ரூபாய் பணத்தை ஜான் ஸ்டீபனிடம் திரும்ப கேட்டிருக்கிறார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த கலையரசி, முகநூல் நண்பரான நம்பி ராஜனுடன் சேர்ந்து ஜான் ஸ்டீபனை கொலை செய்திருக்கிறார். இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CM Vijay | CM விஜய் அறிவிப்பு.. பலியானவருக்கு நிவாரணம்

TNEB Bill | மின்கட்டண குளறுபடி இருந்தால்.. வந்தது புதிய அதிரடி உத்தரவு

DVAC Raid | KN Nehru | KN நேரு இடத்தில் ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்.. அதிரவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை

Kumbakonam | Fire Death | மாணவன் தீக்குளிப்பு.. கும்பகோணத்தில் பரபரப்பு

Vinayagar Chaturthi 2026 | விநாயகர் சிலை வைப்போர்.. கவனம் கவனம் - தமிழக அரசு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்