தமிழ்நாடு

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - லைகாவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

இந்தியன்2 விபத்து தொடர்பாக லைகா தயாரிப்பு நிறுவனத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தந்தி டிவி

கடந்த 19 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு மத்திய குற்றபிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்பியது. இயக்குனர் சங்கர் கடந்த 27 ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றபிரிவில் ஆஜரானார். பின்னர் நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பி 3 ஆம் தேதி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக லைகா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகள் 2 பேரிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நேற்று மாலை விசாரணை நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பு தளமான ஈவிபி பிலிம் சிட்டி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்த மத்திய குற்றபிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு