குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் நோக்கத்துடன், இந்திய கோலைடிஸ் மற்றும் குரோன் நோய் அறக்கட்டளையின் (CCFI) தமிழ்நாடு பிரிவு சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில், நாட்டின் முன்னணி மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றிய அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, CCFI-ன் தமிழகப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். டெல்லி மேக்ஸ் மருத்துவமனை டாக்டர் அஜய் குமார், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் வினீத் அகுஜா மற்றும் லூதியானா தயானந்த் மருத்துவக் கல்லூரி டாக்டர் வந்தனா மிதா ஆகியோர் குடல் அழற்சி நோயின் தீவிரம் குறித்து சிறப்புரையாற்றினர். முன்னதாக நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய சூழலில் இந்த நோய் பரவும் விதம் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி பேசினார்...