ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் நாள் இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மத்திய அரசு அலுவலங்களில் இந்தியை பரப்பும் பிரிவின் அதிகாரிகள் கவுரவிக்கப்படுவார்கள். அந்த கவுரவம் தனக்கு வேண்டாம் என பாலமுருகன் கூறியுள்ளார். மேலும், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கவுரவிக்க பரிந்துரை செய்து அதில் தமிழில் கையெழுத்திட்டு "தமிழன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.