தமிழ்நாடு

ரூ.71 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் : இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில், 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு குங்குமப் பூ மற்றும் 71 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஜாவித் என்பவர், அவசரமாக வெளியேற முயன்றுள்ளார். அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது ஈரான் நாட்டு குங்குமப்பூ பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், 63 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 26 கிலோ குங்குமப்பூவை பறிமுதல் செய்தனர். இதேபோல, கேரளாவை சேர்ந்த அமீர் தேக்குல்லா கேண்டி, ஹரூன் நஹர் மோயத் ஆகியோரிடம் இருந்து 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்