தமிழ்நாடு

ரூ.71 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் : இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில், 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு குங்குமப் பூ மற்றும் 71 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஜாவித் என்பவர், அவசரமாக வெளியேற முயன்றுள்ளார். அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது ஈரான் நாட்டு குங்குமப்பூ பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், 63 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 26 கிலோ குங்குமப்பூவை பறிமுதல் செய்தனர். இதேபோல, கேரளாவை சேர்ந்த அமீர் தேக்குல்லா கேண்டி, ஹரூன் நஹர் மோயத் ஆகியோரிடம் இருந்து 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"