தமிழ்நாடு

ரூ.71 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் : இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில், 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு குங்குமப் பூ மற்றும் 71 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஜாவித் என்பவர், அவசரமாக வெளியேற முயன்றுள்ளார். அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது ஈரான் நாட்டு குங்குமப்பூ பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், 63 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 26 கிலோ குங்குமப்பூவை பறிமுதல் செய்தனர். இதேபோல, கேரளாவை சேர்ந்த அமீர் தேக்குல்லா கேண்டி, ஹரூன் நஹர் மோயத் ஆகியோரிடம் இருந்து 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி