வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் - தவெக நிர்வாகிகள் மீது வழக்கு சேலத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட சண்முகா நகரில் நடைபெற்ற ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தவெக சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சூரமங்கலம் பகுதியில் தவெக என்று அச்சிடப்பட்ட வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்பட்டு நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.