கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கவுண்டம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் 90 வயதான முத்து. இவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர். 1957 ஆம் ஆண்டு கருணாநிதி குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட போது அவருடன் சேர்ந்து பயணம் செய்தவர் முத்து. தற்போது கருணாநிதி மறைந்த நிலையில் அவரைப் பற்றிய நினைவலைகளை முத்து பகிர்ந்து கொண்டார்.