தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: 50 துரித செயல் வாகனங்கள் சேவை - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, 50 துரித வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, 50 துரித வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இந்த வாகனங்கள் அனைத்தும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Vijay | TVK | Chennai | விஜய் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு தகவல்

BREAKING || பெரம்பூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - வெளியான காரணம்

Congress | Jothimani | "தமிழகத்தில் யாராலும் காங்கிரஸை காப்பாற்ற முடியாது.." ஜோதிமணி

ADMK | EPS | NDA Alliance | "குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்..." - சென்னையில் ஈபிஎஸ் அதிரடி பேச்சு

BREAKING || ஊரடங்கு என தீயாய் பரவும் செய்தி - பரபரப்புக்கு நடுவே பிரதமர் முக்கிய மீட்டிங்