சென்னை நொளம்பூரில் தாய், மகள் உயிரிழந்த சம்பவத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் உயிரிழந்ததை அறிந்து, மிகவும் வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.