தமிழ்நாடு

உயிரை விலையாய் கொடுத்த 2 இளைஞர்கள் - சேலத்தில் பயங்கரம்

தந்தி டிவி

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய இருவர் பலி

சேலம் மாவட்டம் மேட்டூரில், சுற்றுலா பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஜீவா மற்றும் பாலா. இருவரும் கொளத்தூர் விராலிகாடு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சுற்றுலா பேருந்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இளைஞர்கள் இருவருமே மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"