தமிழ்நாடு

சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற கூட்டம் : மன்ற பணிகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற சேவைகளை வேகப்படுத்தவும், மாநிலம் முழுவதும் மன்ற பணிகளை கொண்டு செல்லவும், அமைப்பின் மாநில நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம், சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. இதில், மன்ற தலைவர் சபேஷ் ஆதித்தன், பொதுச் செயலாளர் ஜெகதீஸ் சவுந்தர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், காயல் இளவரசு, மாநில துணைத் தலைவர் சாம், மாநில துணை பொதுச்செயலாளர் எம்.சி.ராமச்சந்திரன், சட்ட ஆலோசகர் ஆறுமுக நயினார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் செயல்பாடுகளை வேகப்படுத்தவும், மன்றத்தின் சேவைகளை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லவும் முடிவு எடுக்கப்பட்டது. மன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்