தமிழ்நாடு

வரதராஜபுரம் ஊராட்சியில் கழிவுநீருடன் குடிநீர்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி

* திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நசரத்பேட்டை, வரதராஜபுரம் ஊராட்சிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

* அப்போது, வரதராஜபுரம் ஊராட்சியில் கழிவுநீர், குளம் போல் தேங்கி இருப்பதால், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும், கொசு உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படுவதாகவும் கூறி ஆட்சியரை, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, வட்டாட்சியர் புனிதவதி மற்றும் அதிகாரிகளை ஆட்சியர் கண்டித்ததுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"