சென்னையில் DNC சிட்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விருது வழங்கும் விழா
சென்னையில் DNC சிட்ஸ் நிறுவனத்தின் மண்டல விருது வழங்கும் விழா மற்றும் குடும்ப விழா மிக விமரிசையாக நடைபெற்றது. கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகமெங்கும் சிறப்பான சேவையாற்றி வரும் DNC சிட்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல விருது வழங்கும் விழா, வள்ளுவர் கோட்டத்திலுள்ள கலை அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், DNC குழுமத் தலைவர் D.C.இளங்கோவன், இயக்குநர்கள் மீனா, பிரேம், சினேகா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர். விழாவில், DNC நிறுவன செயலாக்க தலைவர்கள் முன்னிலை வகித்த நிலையில், நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய ஊழியர்களுக்கு விருதுகள், பரிசுகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது. மேலும், பணியாளர்களின் குடும்பத்தினருக்கான ஆடல், பாடல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.