அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, தனது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்த வைத்திலிங்கம், தற்போது திமுக வேட்பாளராக அதே களத்தில் இறங்கத் தயாராகி வருகிறார்.