தமிழ்நாடு

"தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்துக்கு, எட்டு ஆண்டுகால அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்குலைவே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்துக்கு, எட்டு ஆண்டுகால அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்குலைவே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க தமிழக அரசின் தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்களும் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், நிலுவையில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?