வத்தலகுண்டு அருகே பைக் விபத்து - இருவர் பலி வத்தலகுண்டு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் முத்தலாபுரத்தில் அழகுமலை மற்றும் முனியாண்டி ஆகியோர் சென்ற பைக் மீது சொகுசு கார் மோதியதில், இருவரும் உயிரிழந்தனர். விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.