தமிழ்நாடு

பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை - 13 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விபரீத முடிவு

தாராபுரத்தில் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

தாராபுரத்தில் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூலனூர் காவல் நிலையத்தில் வள்ளியம்மாள் என்பவர் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ராமசாமி என்பவருடன் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், குழந்தை இல்லாமல் தவித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வள்ளியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை இல்லாத சோகத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்