தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் நிகர்நிலை அந்தஸ்துடன் துவக்கம்
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் நிகர்நிலை அந்தஸ்துடன் துவக்கம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் 'நிகர்நிலைப் பல்கலைக்கழக' அந்தஸ்து பெற்றதைத் தொடர்ந்து, அதன் பிரம்மாண்ட துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், 2026 - 2027-ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சியும் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றளிப்புக் குழுவினால் (NAAC) ‘A++’ என்ற மிக உயரிய தரமதிப்பீடு சான்று பெறப்பட்டுள்ளதாக கூறினார்.. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஷரண்யா, சமூக முன்னேற்றத்திற்குப் பெண்கல்வியே அடித்தளம் எனக் கூறி மாணவிகளை வாழ்த்தினார்.