#perumaltemple #kalyanavaratharajaperumal #purattasi
புரட்டாசி முதல் வாரத்தை முன்னிட்டு, சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மூலவர் கல்யாண வரதராஜப் பெருமாளுக்கு முத்து அங்கி மற்றும் முத்து மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் ஸ்ரீ பவளவண்ணப் பெருமாளுக்கு லவங்கம் மற்றும் முந்திரியால் செய்யப்பட்ட பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.