கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனீக்கள் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் இருந்த #cuddalore #thanthitv தேன்கூட்டில் இருந்து பறந்த தேனீக்கள், மாணவர்களை கொட்டியதால் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். காயமடைந்த மாணவர்கள் முதலில் மங்களூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.