தமிழ்நாடு

கிரிப்டோ கரன்சி முதலீடு - ரூ.180 கோடி வரை மோசடி?

தந்தி டிவி

கிரிப்டோ கரன்சி முதலீடு - ரூ.180 கோடி வரை மோசடி?

சேலத்தில் கிரிப்டோ கரன்சி முதலீடு எனக்கூறி 180 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாரமங்கலத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அனுசுயாதேவி. இவரது குடும்ப நண்பரான ஸ்டாலின் என்பவர் அனுசுயாதேவி மூலம்

அதே பகுதியை சேர்ந்த 14-க்கும் மேற்பட்டோரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி 40 லட்சம் வரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் காவல் ஆணையரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளதாகவும், மொத்தமாக 180 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"