திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது. அணியாப்பூரை சேர்ந்த லெட்சுணன், பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த பசுமாடு தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சிறிது நேரம் போராடி பசுமாட்டை மீட்டனர்.