கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே 2 வயது பெண் குழந்தையை தங்கத் தாயத்திற்காக பைக்கில் கடத்திச் சென்ற தவெகவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட குழந்தையை மர்ம நபர் சாலையோரம் விட்டுச் சென்ற நிலையில், அவ்வழியாக வந்த இளைஞர் மீட்டு போலீசில் ஒப்படைத்ததைத் தொடர்ந்து குழந்தை பெற்றோரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டது. இது குறித்து விசாரித்த போலீசார் வெற்றிவேல் (27) என்பவரை போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கைது செய்தனர்.