தமிழ்நாடு

கட்டையால் இளைஞர் அடித்து கொலை - 3 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

சென்னையில் இளைஞரை கொலை செய்த 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்குள்ள கடைகளில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு நண்பர்களுடன் நடந்து சென்ற மணிகண்டனை 3 பேர் கும்பல் வழிமறித்து கட்டையால் தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தங்கா, ஹேமந்த்குமார், பாலு ஆகிய 3 பேரும் முன்விரோதம் காரணமாக மணிகண்டனை

தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையான மணிகண்டன் மீது பல வழக்குகள் உள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை