தமிழ்நாடு

கட்டையால் இளைஞர் அடித்து கொலை - 3 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

சென்னையில் இளைஞரை கொலை செய்த 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்குள்ள கடைகளில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு நண்பர்களுடன் நடந்து சென்ற மணிகண்டனை 3 பேர் கும்பல் வழிமறித்து கட்டையால் தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தங்கா, ஹேமந்த்குமார், பாலு ஆகிய 3 பேரும் முன்விரோதம் காரணமாக மணிகண்டனை

தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையான மணிகண்டன் மீது பல வழக்குகள் உள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி