தமிழ்நாடு

கட்டையால் இளைஞர் அடித்து கொலை - 3 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

சென்னையில் இளைஞரை கொலை செய்த 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்குள்ள கடைகளில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு நண்பர்களுடன் நடந்து சென்ற மணிகண்டனை 3 பேர் கும்பல் வழிமறித்து கட்டையால் தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தங்கா, ஹேமந்த்குமார், பாலு ஆகிய 3 பேரும் முன்விரோதம் காரணமாக மணிகண்டனை

தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையான மணிகண்டன் மீது பல வழக்குகள் உள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்