தமிழ்நாடு

10 வயது சிறுமி மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை...

பத்து வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னை மதுரவாயலில் 10 வயதான சிறுமி நேற்று நள்ளிரவில் கழிவறைக்கு செல்ல வெளியே வந்துள்ளார். அதன்பிறகு சிறுமியை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பதற்றமான பெ​ற்றோர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது வீட்டின் பின்புறம் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற 29 வயதான இளைஞர் கழிவறைக்கு சென்ற சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார். சிறுமி சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த அவர், 3வது மாடியில் இருந்து தூக்கி வீசியதாக, தெரியவந்ததை தொடர்ந்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை