தமிழ்நாடு

Chennai | ரூ.9 ஆயிரமாக உயர்வதாக அறிவிப்பு - சென்னையில் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் இறங்கிய பேரிடி

ரூ.9 ஆயிரமாக உயர்வதாக அறிவிப்பு - சென்னையில் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் இறங்கிய பேரிடி

thanthitv

சென்னையில் மே 5 முதல் விடுதி கட்டணம் உயர்வதாக அறிவிப்பு வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் வரும் 5ஆம் தேதி முதல் PG தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வு காரணமாக, சென்னையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக, தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 4 பேர் பகிர்ந்துகொள்ளும் ஏசி இல்லாத அறையின் கட்டணம் 6,500 ரூபாயாகவும், ஏசி வசதியுடன் 7,500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 பேர் பகிர்ந்துகொள்ளும் ஏசி இல்லாத அறையின் கட்டணம் 7,000 ரூபாயாகவும், ஏசி வசதியுடன் 8,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2 பேர் பகிர்ந்துகொள்ளும் ஏசி இல்லாத அறையின் கட்டணம் 8,000 ரூபாயாகவும், ஏசி வசதியுடன் 9,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விடுதிகளின் வசதியைப் பொறுத்து இந்தக் கட்டணங்கள் மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு