சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் இரண்டு கார்கள் மோதியதில் சட்டக்கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தரமணி அம்பேத்கர் சட்டக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலை வழியாக காரில் வந்துள்ளனர்... அப்போது திடீரென முன்னால் சென்ற கார் வலது புறமாக திரும்பியது.. மாணவர்கள் சென்ற கார் முன்னால் சென்ற கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஜூனு தலை சிதைந்து உயிரிழந்தார்.... காரை ஒட்டிய ஜெகதிப் உட்பட மற்ற மூன்று நபர்கள் லேசான காயத்துடன் அருகிலுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்... விபத்து குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..