கோவில் வருமானத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாகனம் வாங்க தடை கோரிய மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் வருமானத்தில் திருப்பணிகளை மேற்கொள்ளாமல், அதிகாரிகளுக்கு கார் வாங்க பயன்படுத்தப்படுவதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத், மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு