நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புற படிக்கட்டு கழன்று சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பயணித்த மாணவ, மாணவிகள் உட்பட பயணிகள் மாற்று பேருந்தில் ஏறிச் சென்றனர்...
படிக்கட்டை கயிற்றால் கட்டி, பணிமனைக்கு பேருந்தை எடுத்துச் சென்றனர்.