தமிழ்நாடு

கடல் சீற்றத்தால் 3 மீனவர்களுடன் கவிழ்ந்த படகு | மீட்கப்படும் திக் திக் காட்சி

தந்தி டிவி

கடல் சீற்றம் - படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 3 மீனவர்கள் மீட்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடல் சீற்றத்தால் பைபர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து பைபர் படகில் அஞ்சப்பன் அவரது மகன் அஜித் மற்றும் செல்வராஜ் ஆகிய 3 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கடும் சீற்றத்தால் படகு கடலில் கவிழ்ந்தது. இதைக் கண்ட கரையில் நின்ற சக மீனவர்கள் அலையில் போராடி 3 மீனவர்களையும் மீட்டு கரை சேர்த்தனர்... படகு கவிழ்ந்ததில் காயம் அடைந்த அஞ்சப்பன் அவரது மகன் அஜித் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"