திருவள்ளூர் அருகே சமூக வலைதளங்களில் லைக்குகள் பெற வேண்டும் என்ற ரீல்ஸ் மோகத்தால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - மகாபலிபுரம் விரைவுச் சாலையில், ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் ஆபத்தான முறையில் 'வீலிங்' செய்தபடி சீறிப்பாய்ந்துள்ளனர். இதனைப் பின்னால் வந்த அவர்களின் நண்பர்கள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இதுபோன்ற செயல்கள் குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.