தமிழ்நாடு

பிகில் பட வரி ஏய்ப்பு புகார் விவகாரம் : தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்

பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி

பிகில் பட வரி ஏய்ப்பு புகார் தொடர்பான வருமான வரி சோதனையில் 77 கோடி பணம், கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து ஏற்கனவே, நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் தரப்பு ஆடிட்டர்கள் விளக்கம் அளித்தனர். தங்கள் தரப்பு விளக்கங்களை பிரமாண பத்திரமாக அவர்கள் அளித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி