தமிழ்நாடு

காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம் - சடலத்தை மீட்பது யார்? - போலீசாரிடையே எல்லை தகராறு

பவானி அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை மீட்பது தொடர்பாக போலீசாருக்கு இடையே எல்லை தகராறு ஏற்பட்டது.

தந்தி டிவி
பவானி அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை மீட்பது தொடர்பாக போலீசாருக்கு இடையே எல்லை தகராறு ஏற்பட்டது. கேசரிமங்கலம் காவிரி ஆற்றில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்து வருவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், சடலம் இருப்பது சேலம், தேவூர் காவல் நிலைய எல்லை பகுதி என தெரிவித்தனர். தேவூர் போலீசாரோ சடலம் இருக்கும் பகுதி ஈரோடு மாவட்ட எல்லை பகுதி என கூறி சடலத்தை எடுக்க மறுத்து விட்டனர். சடலம் சுமார் 6 மணிநேரம் மீட்கப்படாமல் நீரில் மிதந்தபடி கூத்தம்பூண்டி பகுதியை வந்தடைந்தது. பின்னர் பவானி போலீசார் சடலத்தை மீட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை