தமிழ்நாடு

மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா - தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தகவல்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், கொரோனா பாதித்த சிங்கங்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், கொரோனா பாதித்த சிங்கங்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.சென்னை அருகே வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஏற்கெனவே 9 சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது மற்றொரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த சிங்கத்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"