கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே, மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபரால், ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கருமத்தம்பட்டி அருகே ரகு என்பவர் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.