தமிழ்நாடு

போதையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது

போதையில் கத்தியுடன் திரிந்த இளைஞர்கள் தெருவில் நின்ற வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

தந்தி டிவி
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியில் போதையில் பட்டாகத்தியுடன் வாகனங்களை சேதப்படுத்திய இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.நள்ளிரவு 12 மணியளவில் போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பட்டா கத்தி, உருட்டுகட்டை, கற்கள் போன்றவற்றை பயன்படுத்தி தெருக்களில் நின்று கொண்டிருந்த 15 இருசக்கர வாகனம், 3 கார், ஒரு ஆட்டோ என 20க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்து அவர்களை விரட்ட முயற்சித்தபோது கத்தியுடன் இருந்த இளைஞர்கள் பொதுமக்களை மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அருண், முரளி,கார்த்திக்,நாகராஜ்,சலீம் ஆகிய 5 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு