விளையாட்டு

பட்டைய கிளப்பும் புரோ கபடி தொடர்... சாம்பியன் பட்டம் வெல்லுமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி தொடரின் 6வது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை முதல் சென்னையில் தொடங்குகிறது.

தந்தி டிவி

`* புரோ கபடி தொடரின் 6வது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை முதல் சென்னையில் தொடங்குகிறது. 12 அணிகள் 2 பிரிவுகளாக போட்டியில் பங்கேற்கின்றன. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. கபடி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ள இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

* கபடியின் அடையாளமாக திகழும் தமிழ்நாட்டிற்கு இம்முறை பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்குகிறது.

* இம்முறை தமிழ் தலைவாஸ் அணியில் MANJEET CHILAR,JASVIR SINGH உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்கள் இடம்பெற்றுனர். இவர்களுடன் அணியின் தலைவனான அஜய் தாக்கூர் இணைந்திருப்பதால் இந்த தொடர் சரவெடியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

* தமிழ் தலைவாஸ் அணியில் பிரதாப், அருண் உள்ளிட்ட திறமையான இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 2 அர்ஜூனா விருது வென்ற வீரர்கள், உலகக் கோப்பையை வென்று தந்த வீரரும் தமிழ் தலைவாஸ் அணியில் இருப்பதால், இம்முறை தமிழ் தலைவாஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்