விளையாட்டு

பட்டைய கிளப்பும் புரோ கபடி தொடர்... சாம்பியன் பட்டம் வெல்லுமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி தொடரின் 6வது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை முதல் சென்னையில் தொடங்குகிறது.

தந்தி டிவி

`* புரோ கபடி தொடரின் 6வது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை முதல் சென்னையில் தொடங்குகிறது. 12 அணிகள் 2 பிரிவுகளாக போட்டியில் பங்கேற்கின்றன. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. கபடி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ள இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

* கபடியின் அடையாளமாக திகழும் தமிழ்நாட்டிற்கு இம்முறை பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்குகிறது.

* இம்முறை தமிழ் தலைவாஸ் அணியில் MANJEET CHILAR,JASVIR SINGH உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்கள் இடம்பெற்றுனர். இவர்களுடன் அணியின் தலைவனான அஜய் தாக்கூர் இணைந்திருப்பதால் இந்த தொடர் சரவெடியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

* தமிழ் தலைவாஸ் அணியில் பிரதாப், அருண் உள்ளிட்ட திறமையான இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 2 அர்ஜூனா விருது வென்ற வீரர்கள், உலகக் கோப்பையை வென்று தந்த வீரரும் தமிழ் தலைவாஸ் அணியில் இருப்பதால், இம்முறை தமிழ் தலைவாஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்