பஞ்சாப் மாநில உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இரட்டைச் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
அமிர்தசரஸ் அணிக்காக விளையாடிய அவர், 91 பந்துகளில் 25 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 233 ரன்கள் விளாசி அசத்தினார்.
அவரது இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், அமிர்தசரஸ் அணி 50 ஓவர்களில் 533 ரன்களைக் குவித்தது.