பிரதமர் மோடியின் “Operation Sindoor” ட்வீட் வீரர்களை உற்சாகப்படுத்தியது என இந்திய அணி கேப்டன், சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை வெற்றிக்கு பின்னர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடியின் ட்வீட்டை பாத்ததும் அவர் களத்தில் நின்று ரன்கள் எடுத்ததை போன்ற உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். பிரதமர் தங்களுடன் இருக்கும்போது, வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடிவதாக புகழ்ந்துள்ள அவர், முழு நாடும் கொண்டாடுவது இந்திய அணியை மேலும் ஊக்கம், உற்சாகம் பெற்று சிறப்பாக செயல்பட உதவுவதாக தெரிவித்துள்ளார்.