விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் முன்னணி வீரர் அர்ஜுன் எரிகேசி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

தந்தி டிவி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவு ஆறாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகேசியும் அரவிந்த் சிதம்பரமும் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகேசி 48-வது நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 7 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 6 சுற்றுகளின் முடிவில் அர்ஜுன் எரிகேசி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். தொடரின் கடைசி நாளான இன்று கடைசி மற்றும் 7-வது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு