அமித்ஷா, மம்தா இடையே வெடித்த போர் #amitshah #bjp | #MamataBanerjee #thanthitv மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், எஞ்சியுள்ள 142 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட பிரச்சாரத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, சந்தேஷ்காலி மற்றும் ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவங்களைக் குறிப்பிட்டு மாநில அரசை கடுமையாக சாடினார். 5-ஆம் தேதிக்கு பின் வங்கத்தில் பெண்கள் நள்ளிரவிலும் அச்சமின்றி நடமாடலாம் என்றும் அவர் உறுதி அளித்தார். இதற்குப் பதிலடி கொடுத்த முதல்வர் மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினரின் பெயர்களை நீக்க பாஜக முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். என்.ஆர்.சி அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்."