உதயநிதி - சீமான் அருகருகே அமர்ந்து நெகிழ்ச்சி பேச்சு இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில், உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்ட நிலையில், இருவரும் விழா மேடையில் அருகருகே அமர்ந்து கைகுலுக்கி நலம் விசாரித்து உரையாடிய காட்சிகள் கவனம் பெற்றன.