அரசியல்

விஜயபிரபாகரனை ஆதரித்து சிவகாசியில் பட்டாசாக வெடித்த எடப்பாடி

தந்தி டிவி

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பட்டாசு தொழிலை பாதுகாக்க தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். கூட்டணி வைப்பவர்களை கைதூக்கி விடுவது அதிமுகவின் பண்பு என்றும் அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் அடையாளம் தெரியாமல் போய் விட்டதாகவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் எங்கும் தன்னை பற்றியே பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். விஜய பிரபாகரனை

நல்ல மகனாக விஜயகாந்த் வளர்த்துள்ளதாகவும், விஜயபிரபாகரனை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார்.

BREAKING || எஸ்.பி முத்துராமனுக்கு தமிழக அரசு விருது

Breaking | NIA | பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் மீது NIA பரபரப்பு குற்றப்பத்திரிகை

Breaking | U19 Worldcup | India | 6வது முறையாக உலகக்கோப்பையை தட்டித்தூக்கிய இந்தியா

BREAKING || "NDA-வில் கைகோர்க்கும் மேலும் பலர்" - புது டீமை உருவாக்கிய நயினார் நாகேந்திரன்

Breaking | Parasakthi | பராசக்தி OTT ரிலீஸ் தடை? | கதை திருட்டு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி