அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது பாட்னாவில்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. "பிகார் கி பாத்" என்ற பெயரில் அவர் முகாம் நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், மற்றொருவரின் தேர்தல் பிரசார திட்டங்களை பிரசாந்த் கிஷோர் பயன்படுத்தியதாக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.