அரசியல்

"சக்திக்காக உயிரையும் கொடுப்பேன்".. உணர்ச்சி பொங்க பேசிய பிரதமர்

தந்தி டிவி

எதிர்வரும் தேர்தல் சக்தியை அழிக்க நினைப்போருக்கும் வழிபடுவோருக்கும் இடையிலான தேர்தல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கானா மாநிலம் ஜக்தியால் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சியும் காங்கிரஸும் குற்றங்களில் கூட்டாளியாக இருப்பதாகக் கூறினார். மோடி சக்திக்கு எதிரானது தங்களின் போராட்டம் என எதிர்க்கட்சிகள் கூறுவதாகக் கூறிய அவர், தன்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தாய்மார்களும் மகள்களும் சகோதரிகளும்தான் சக்தியின் வடிவம் எனக் குறிப்பிட்டார்.

நடைபெறும் தேர்தல் சக்தியை அழிக்க நினைப்போருக்கும் சக்தியை வழிபடுவோருக்கும் இடையிலான தேர்தல் எனக் குறிப்பிட்ட பிரதமர், சக்தியை பாதுகாக்க தன்னுடைய உயிரையும் கொடுக்க தான் தயாராக இருக்கிறேன் என்றார். நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல்களுக்கு பின்னால் குடும்ப அரசியல் கட்சிகளே உள்ளதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி