அரசியல்

உலக நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசு - என்ன தெரியுமா?

தந்தி டிவி

உலக நாட்டு தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய கலைப்பொருட்களை பரிசாக வழங்குவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் லாவோசில் தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு லடாக்கிலிருந்து அலங்கார பானையுடன் கைவினைப்பொருளால் செய்யப்பட்ட குறைந்த உயர மேஜையை பரிசாக அளித்தார். லாவோஸ் அதிபர் தோங்லோன் சிசோலித்துக்கு தமிழ்நாட்டிலிருந்து அழகிய வேலைபாடு கொண்ட பழங்கால பித்தளை புத்தர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு மேற்கு வங்கத்தில் உருவாக்கப்படும் வெள்ளி மயில் சிற்பத்தை பரிசளித்தார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு மகாராஷ்டிராவில் தயாரிக்கப்படும் அழகிய வேலைப்பாடு கொண்ட வெள்ளி விளக்குகளை வழங்கினார். லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபாண்டோனுக்கு வண்ணம் பொறிக்கப்பட்ட புத்தர் சிலையை பரிசளித்தார். அவரது மனைவிக்கு ராதா-கிருஷ்ணா உருவம் செதுக்கப்பட்ட மலாக்கிட் படிகம் மற்றும் ஒட்டக எலும்புப் பெட்டியை பரிசாக வழங்கினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?