அரசியல்

"விரைவில் சிட்னி நகரைப் போல் மதுரை மாறும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை வைகை ஆற்றில், ஒருசொட்டு கழிவுநீர் கூட கலக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மதுரை வைகை ஆற்றில், ஒருசொட்டு கழிவுநீர் கூட கலக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வைகையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருந்து தூய்மைப் பணிகளை துவக்கி வைத்த அவர், சீர்மிகு மதுரை என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். பாலங்களின் கட்டுமானம் மற்றும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இரண்டும் நிறைவுபெற்றவுடன், போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும் என செல்லூர் ராஜூ கூறினார். இந்தப் பணி, வரும் டிசம்பருக்குள் முடிவடையும் என்று கூறி, 'ஸ்மார்ட் சிட்டி மதுரை' எனும் செயலியையும் துவக்கி வைத்த அவர், மதுரை சிட்னி நகராக மாறும் என்றார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்