அரசியல்

அழைப்பை ஏற்ற ராகுல்.. மோடியின் முடிவு என்ன?

தந்தி டிவி

மக்களவைத் தேர்தல் தொடர்பான பொது விவாதத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்ற ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் விவாத‌த்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பான பொது விவாதத்திற்கு வருமாறு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான மதன் லோக்கூர், அஜய் ஷா உள்ளிட்டோர் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த பொது விவாத அழைப்பை ஏற்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்காக, பிரதான கட்சிகள் நாட்டுக்கான தங்களது தொலைநோக்கு சிந்தனையை ஒரே தளத்தில் முன் வைப்பதற்கு, ஆக்கபூர்வ முன்னெடுப்பாக இது இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த பொது விவாத‌த்திற்கு பிரதமர் மோடியும் பங்கேற்க வேண்டும் என நாடு எதிர்பார்ப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி பங்கேற்க விருப்பம் தெரிவித்தால், விவாதத்திற்கான வடிவம் மற்றும் விவரங்கள் குறித்து ஆலோசிக்கலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை